தமிழகத்தில் இந்த ஆண்டு தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 19 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அது மட்டும் இல்லாமல் 50 நகராட்சிகளின் எல்லை விரிவடைகிறது.

தற்போது 25 மாநகராட்சிகள் உள்ள நிலையில் மாவட்டத்திற்கு ஒரு மாநகராட்சி என புதிதாக 14 மாநகராட்சிகளை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.