
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் பேட்டியில் கூறியுள்ளார். கடைசியாக ஜூன் 20 முதல் 29 வரை மானியக் கோரிக்கைகளுக்காக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.