தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கச்சத்தீவை மீண்டும் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை அரசினர் தனி தீர்மானத்தை கொண்டு வருகிறார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அரசுடன் பேசி சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.