பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன். இவர் உடல்நல குறைவு காரணமாக கேரளாவில் உள்ள கொச்சியில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட்ட மொழிகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய ஜெயச்சந்திரனுக்கு 80 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு, வசந்தகால நதியினிலே, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, சொல்லாமலே யார் பார்த்தது, என் மேலே விழுந்த மழைத்துளியே, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே உள்ளிட்ட பல அருமையான பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் தேசிய விருது வென்றுள்ள நிலையில் கேரள அரசின் 6 விருதுகள் மற்றும் தமிழக அரசின் இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.