அல்லு அர்ஜுன் ராஷ்மிகா வந்தனா நடிப்பில் இன்று புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. முதல் பாகம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இரண்டாவது பாகமும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் புஷ்பா 2 படம் வெளியிட்டு திரையிடலில் அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைடலை காண நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் வந்தார்.

அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது காவலர்கள் தடியடி நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த ரேவதி என்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த அல்லு அர்ஜுன் கூறியதாவது, ரசிகை உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். என் சார்பில் ரூ.25 லட்சம் வழங்குவேன்.  எங்கள் குழுவினரிடம் இருந்து எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம். இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சவாலான சூழ்நிலையில் பலியான பெண் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தேவையான, சாத்தியமான உதவிகளை வழ​ங்குவேன் என கூறியுள்ளார்.