ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டில் உள்ள அனைத்து அப்டேட்களையும் நீங்கள் இலவசமாக செய்து கொள்ளலாம். பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் பெரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மண்டல அலுவலங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமை நடத்தப்படுவதுண்டு.

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 ஆவது மண்டல உதவியாளையாளர் அலுவலகங்களில் வருகிற 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, கைபேசி எண் மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச் சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட தொடர்பான சேவைகள் இந்த முகாம்களில் நடத்தப்படும்.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஏதாவது புகார்கள் இருந்தால் அவற்றை சிறப்பு முகாம்களில் தெரிவித்தால் உடனே தீர்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.