
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். இவர் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் மீண்டும் நடிகர் தனுஷ் உடன் இணைந்து இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் விஜய்சேதுபதி உடன் இணைந்து தலைவன் தலைவி என்ற படத்திலும் நடிக்கிறார்.
இப்படத்தின் சிறிய கிளிப்ஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நித்யா மேனன் தன்னுடைய கருத்துக்களை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் முன்வைப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. அப்படிதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, பெரும்பாலான ஆண்கள் ஒரு சாதாரண பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படி நடிகைகளிடம் நடந்து கொள்வதில்லை.
நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் ரசிகர்கள் பலரும் எங்களிடம் கை கொடுப்பதும், ஒட்டி உரசி நின்று புகைப்படம் எடுக்கவும் கேட்கிறார்கள். இந்த கேள்வியை அவர்கள் ஒரு சாதாரண பெண்ணிடம் கேட்பதில்லை நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள் அப்படி சுலபமாக தொட்டு விட நாங்கள் என்ன பொம்மைகளா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.