அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசோ மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரோஷ்மிதா (26). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கவுக்காத்தில் தங்கி அரசு பொதுத்தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

கடந்த ஜூன் 4ஆம் தேதி ரயில்வே தேர்வுக்காக டெல்லிக்கு சென்றுள்ளார். ஆனால் தனது தாயிடம் போனில் ரயிலில் திரும்பி வருவதாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரோஷ்மிதாவின் தாய் சந்தேகம் அடைந்து தனது குடும்பத்திடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின் ரோஷ்மித்தாவின் மொபைலுக்கு அழைப்பு விடுத்தும் எந்த ஒரு பதிலும் இல்லை. அதனால் பயந்து போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆற்றங்கரையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அது ரோஷ்மிதாவின் சடலம் என தெரியவந்தது. இதனை அடுத்து ரோஷ்மிதாவின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஹேமந்த் ஷர்மா மற்றும் அரியானாவை சேர்ந்த பங்கஜ் கோகர் என்ற இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.