
மத்திய பிரதேசம் மாநிலத்தில் குவாலியர் ராஜாகி மண்டி பகுதியில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாக சுற்றி வரும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் அந்த இளம் பெண் இரவு நேரத்தில் தெருக்களில் உள்ள வீடுகளில் கதவு அருகே சென்று அழைப்பு மணியை அடிக்கிறார். அதன் பின் அந்த வீட்டை விட்டு வேகமாக நகர்ந்து மற்றொரு வீட்டில் அழைப்பு மணியை அடிக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாக சென்று அழைப்பு மணியை அடிப்பதாகவும், இதனால் தூக்கம் கெடுவதாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பத்தப்பட்ட பெண்ணை கண்டறிய மேற்கொள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ग्वालियर में एक वायरल वीडियो को लेकर अफवाहों का बाजार गर्म है।लोगों का कहना है कि एक रहस्यमयी महिला आधी रात को आती है और घरों के दरवाजे पर लगी घंटी बजा देती है।पुलिस इस घटना को लेकर अलर्ट है।हम इस वायरल वीडियो की सत्यता की पुष्टि नहीं करते हैं। pic.twitter.com/i4bbqqdKQ7
— Amit Gaur (@GaurAmit30) March 22, 2025