பிரான்ஸில் சமீபகாலங்களாக  கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர்களை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமீபத்தில், பிரான்சின் தலைநகரான பாரிஸில், ஒரு பிரபல கிரிப்டோ நிறுவனத்தின் தலைவர் குடும்பத்தைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை broad daylight-ல் நடந்த இந்த சம்பவத்தில், நான்கு முகமூடி அணிந்த நபர்கள், 11வது மாவட்டத்தில் உள்ள  ஒரு தம்பதியர் மற்றும் அவர்களது குழந்தையை கடத்த முயன்றனர்.

திடீரென வாகனத்தில் இருந்து 3 பேர் வெளியேறி, பெண் மற்றும் குழந்தையை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அதனை தடுக்க முயன்ற கணவரை அந்தக் மர்ம நபர்கள் அடித்து காயப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலின்போது அந்தப் பெண், பயங்கர தைரியத்துடன் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியை பிடித்து இழுத்து அவரை தள்ளி விட்டு தப்பித்துள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு  அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். மேலும் ஒரு குடியிருப்பாளர் நெருப்பணை ஒன்றை வீசி தாக்கியதையடுத்து, கொள்ளையர்கள் வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். அதன்பின் மூவரும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஏற்கனவே கிரிப்டோமில்லியனர் ஒருவரின் மகனை வற்புறுத்தும் நோக்கில் அவரது தந்தையை கடத்தி விரல்களை வெட்டி கொடுமை படுத்தியுள்ளனர்.

அதாவது, மே மாத தொடக்கத்தில், பாரிஸ் நகரின் 14வது மாவட்டத்தில் நடுநாள் நேரத்தில் ஒரு 60 வயது மனிதர் கடத்தப்பட்டார். அவரது மகன் ஒரு கிறிப்டோ மில்லியனர் என்பதும், அவரது பெயர் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவரை 4 நபர்கள் ஒரு டெலிவரி வேனில் தள்ளிவிட்டு கடத்தினர். 2 நாட்களுக்கு மேல் அவர் ஒரு வீட்டில் தனித்து வைக்கப்பட்ட நிலையில், அவரது விரல்களில் ஒன்றை வெட்டிவிட்டு கொடுமை செய்துள்ளனர்.

அதன் பின்னர், பீரங்கியுடன் கூடிய போலீசார் பாரிஸிற்கு தெற்கே உள்ள வீட்டில் சோதனை நடத்திய போது, 5பேர்  கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 20-வயதுக்குட்பட்டவர்கள். இந்தச் சம்பவங்களால், பிரான்ஸில் கிரிப்டோ சம்பந்தப்பட்ட செல்வந்தர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதான தாக்குதல்கள் புதிய ஆபத்துகளாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.