
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில், மின்சாரம் தாக்கி மயங்கிய காகத்தை உயிர் பிழைக்க செய்த தீயணைப்பு வீரர் வெள்ளத்துரை அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சம்பவம் நிகழ்ந்த போது, மின்மாற்றியின் மீது அமர்ந்திருந்த காகம் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சாலையில் விழுந்தது. இதைக் கண்ட தீயணைப்பு வீரர் உடனடியாக சென்று, காகத்திற்கு சி.பி.ஆர் (முதலுதவி) சிகிச்சை செய்தார்.
தீவிர சிகிச்சையால் காகம் மீண்டும் உயிர்ப்பிழைத்தது, பின்னர் அதை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிழல் பகுதியில் விட்டனர். சிறிது நேரத்தில் காகம் இயல்பு நிலைக்குத் திரும்பி பறந்து சென்றது. இந்தச் சம்பவம் கோவையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில், பொதுமக்கள் அனைவரும் தீயணைப்பு வீரர் வெள்ளத்துரைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.