இயற்கை பேரிடர்கள் மனிதகுலத்தையே சோகத்தில் ஆழ்த்தும் வேளையில், சக மனிதர்களின் துயரத்தைக் கூட மதிக்காமல் சில மதவெறி பிடித்த கணக்குகள் சமூக வலைதளங்களில் விஷம் கக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கோர வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு சமூக வலைதளப் பக்கம் செய்த கீழ்த்தரமான செயல் தற்போது பெரும் கண்டனங்களைச் சம்பாதித்துள்ளது.
நேபாள வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் சிவனின் சிலை ஒன்று அடித்துச் செல்லப்படுவதைக் காட்டும் வீடியோவை, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் “டெய்லி ஆப்கானிஸ்தான்” என்ற சமூக வலைதளப் பக்கம் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதோடு நிற்காமல், “சிலைகளை அழிக்கும் அல்லாஹ்க்கு புகழுடையதாகுக” என்ற வாசகத்தையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
We never mocked when other people & nations suffered due to devastating earthquake, deadly floods & catastrophic natural disasters.
Be Human, Respect Others, Love All https://t.co/HmW4uCIrQR— Kiren Rijiju (@KirenRijiju) August 31, 2026
28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்த கணக்கு, நேபாளத்தின் பேரிடரைக் கூட தங்களது மதவெறியைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்தியது இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பக்கம் தொடர்ந்து இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களைக் கேலி செய்து பதிவுகளை வெளியிட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் வைரலான இந்த மதவெறிப் பதிவைக் கண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அதற்குத் தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மற்ற நாடுகள் மற்றும் மக்கள் கடுமையான பூகம்பங்கள், கொடூர வெள்ளப்பெருக்கு மற்றும் பெருந்துயரங்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டபோது நாங்கள் எப்போதுமே அவர்களைக் கேலி செய்ததில்லை. மனிதநேயத்துடன் இருங்கள், மற்றவர்களை மதியுங்கள், அனைவரையும் நேசியுங்கள் என்று மிக ஆழமான மற்றும் நாகரிகமான பதிலைக் கொடுத்துள்ளார்.
மேலும் நேபாளத்தில் 900-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய இந்த மாபெரும் சோகத்திலும், மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டவர்களை நெட்டிசனுகளும் தங்களது கண்டனங்களால் வறுத்தெடுத்து வருகின்றனர். பேரிடர் காலத்தில்கூட மனிதன் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்பதை அமைச்சரின் இந்தச் செய்தி உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
