கர்நாடகாவைச் சேர்ந்த ஷீத்தல் பிரசாத் என்ற பெண் ஆன்லைனில் வாங்கிய நகை பிடிக்காததால் அதைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளார்.வழக்கம் போலப் பொருட்களைப் பெற்றுச் செல்ல டெலிவரி ஏஜென்ட் ஒருவரும் வந்துள்ளார். வாடிக்கையாளர்கள் வழக்கமாக சில கிளிக்குகளில் முடித்துக்கொள்ளும் சாதாரணமான ஒரு ரிட்டர்ன் பணிதான் என்றாலும், அந்த டெலிவரி ஏஜென்ட் பொருட்களைச் சரிபார்ப்பதற்காக வீட்டின் அருகே உள்ள சாலையோரமாக அமர்ந்து தனது வேலையைச் செய்த விதம் அந்தப் பெண்ணின் மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.
View this post on Instagram
அந்த டெலிவரி ஏஜென்ட் சாலையோரே அமர்ந்து பொறுமையாகப் பொருட்களைச் சோதித்துப் பார்த்த அந்த எளிய காட்சியைக் கண்ட ஷீத்தல் பிரசாத் உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.அந்தச் சிறிய தருணம் தன் நெஞ்சை விட்டு நீங்காமல் ஆழமாகப் பதிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடினமான சூழ்நிலைகளில் உழைத்து வாழும் சாதாரண மக்களின் உழைப்பைக் காட்டும் இந்தப் பதிவு இணையத்தில் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது தீயாய் பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள், உழைக்கும் மக்களின் பின்னால் இருக்கும் கண்ணீர்க் கதைகளையும் கடின உழைப்பையும் பாராட்டித் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். சாதாரணமான ஒரு டெலிவரி சேவையை எதார்த்தமாகப் பதிவு செய்திருந்தாலும், அது பலரது கண்களிலும் நீரை வரவழைத்துள்ள இந்தச் சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
