தமிழக அரசியல் களம் 108 இடங்களை வென்ற தவெக-வின் பதவியேற்பு இழுபறியால் தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல நடிகர் தம்பி ராமையா வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ அறிக்கை காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

“ஆளுநர் ஐயா… உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்” எனத் தொடங்கி, “விஜய் இப்போது அடுத்த எம்.ஜி.ஆராகி விட்டார்; 2 கோடி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். ஓட்டுரிமை இல்லாத குழந்தைகள் கூட அவர் சிஎம் ஆக வேண்டும் என ஏங்குகிறார்கள். அந்தச் சின்னஞ்சிறு இதயங்களின் ஆசையைக் காப்பாற்றுங்கள். அவருக்கு 2 வாரம் டைம் கொடுங்கள், பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும், இல்லையென்றால் கலைத்துவிடுங்கள். தயவுசெய்து அவரை அழைத்து வாய்ப்பு கொடுங்கள்” எனப் பொதுமக்களில் ஒருவனாக அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

“>

 

ஒரு பக்கம் திமுக-அதிமுக கூட்டணி வதந்திகள் பரவ, மறுபக்கம் தம்பி ராமையாவின் இந்த உணர்ச்சிகரமான “எம்.ஜி.ஆர்” ஒப்பீடு தவெக தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.