ஐபிஎல் 2026 தொடர் தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் தமிழக வீரர் நடராஜன் தனது முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில், துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நடராஜன், வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்து அசத்தியுள்ளார்.
இவரது இந்தத் துல்லியமான யார்க்கர்கள் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தது மட்டுமல்லாமல், டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலத்தையும் சேர்த்துள்ளது. ”நட்டு இஸ் பேக்” என ரசிகர்கள் கொண்டாடும் வகையில், தனது பழைய ஃபார்மை மீண்டும் நிரூபித்துள்ளார் இந்தத் தமிழக வீரர்.
மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறவிட நினைத்த லக்னோ வீரர்களுக்கு, நடராஜனின் பந்துவீச்சு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படும் நடராஜனின் செயல்பாடு, இந்த சீசனில் டெல்லி அணிக்கு ஒரு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
