
ஆஸ்கார் விருதுகளை வழங்க சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் குழுவில் இணைய நடிகர் கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று ஆஸ்கார் விருது குழு அகாடமியில் இணைந்து கொள்ள 534 படைப்பாளிகளுக்கு இன்வைட் அனுப்பியுள்ளது.
அதில் கமல்ஹாசன் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான், குர்ரானா, ரனபீர் தாஸ், மேக்ஸிமா பாஸு, பாயல் கபாடியா என 8 படைப்பாளிகளுக்கு குழுவில் இணைய டிக்கெட் அனுப்பப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் புதிதாக 534 நபர்களுக்கு ஆஸ்கார் குழுவில் இடம் பெறுவதற்கான உறுப்பினர் படிவம் அனுப்பப்பட்டுள்ளது.
அகாடமி ஜூரி குழுவில் ஏற்கனவே ஆஸ்கார் குழுவில் மெம்பராக இருக்கும் இருவர் முன்மொழிய வேண்டும். இந்த ஆண்டு ஆஸ்கார் தேர்வுக்கு குழுவில் ஒரு புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இனி ஒரு பிரிவில் இருக்கும் எல்லா படைப்புகளையும் பார்த்தவர்கள் மட்டுமே அந்த பிரிவில் தேர்வாகும் படத்துக்கு வாக்களிக்க முடியும். இதற்கு முன்னர் அனைத்து படங்களையும் பார்த்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அடுத்த ஆண்டு விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அந்தப் படைப்புகளில் பிடித்தவற்றை கமல்ஹாசன் தேர்வு செய்யலாம்.