உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் இருந்து கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேதார்நாத் கோயில் அருகே உள்ள கௌரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அந்த விபத்தில் 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானி ராஜ்வீர் சிங் சௌகான். இவரது மனைவி தீபிகா சௌகான். இருவருக்கும் திருமணம் ஆகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இருவருமே ராணுவத்தில் லெப்டினன்ட் கர்ணலாக பணியாற்றி வந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ராஜ்வீர் சிங் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஆர்யன் ஏவியேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் விமானியாக பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் விமான விபத்தால் ராஜீவ் சிங் உயிரிழந்துள்ளார். அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி ராணுவ சீருடை அணிந்து கண்ணீருடன் அவரின் புகைப்படத்தை ஏந்தியபடி பங்கேற்றுள்ளார்.

மேலும் அந்த இறுதி ஊர்வலத்தில் ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பங்கேற்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரின் மனதை கலங்க செய்துள்ளது.