மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்நகர் மாவட்டத்தில் திருமணமான ஒரு மணி நேரத்தில் மணப்பெண் நகை மற்றும் பணத்தை சுருட்டி கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராம்கோபால் என்ற இளைஞருக்கும் திவ்யா பக்ஞானி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் பின்னர் கோவிலில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமக்கள் ஏழு சுற்றுகள் சுற்றி முடிந்த உடன் மணமகளின் குடும்பத்தினர் குளியல் அறைக்கு செல்ல வேண்டும் என கூறினார். அதன்படி மணமகள் திவ்யா மற்றும் அவரது உறவினர்களான கோகுல், ஜாம்னால் ஆகியோர் குளியலறைக்கு சென்ற நிலையில் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.

அவர்கள் மணமகனிடமிருந்து பெற்ற நகை மற்றும் பணம் போன்றவற்றை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ராம் கோபாலின் தந்தை தன்னுடைய மகனின் திருமணத்திற்காக நகைகளை விற்று தான் பணம் சேகரித்துள்ளார். ஆனால் அந்த பணத்தை திருமணம் ஆன ஒரு மணி நேரத்தில் மணமகள் மற்றும் அவரது உறவினர்கள் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடியது அவர்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக ராம்கோபால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைமாக உள்ள மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.