தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில்  பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த 25ஆம் தேதி அன்று வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் வீட்டிலிருந்த 8 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இது குறித்து ராணிமாவின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்த பிரசாந்த் வீட்டில் தனியாக இருந்த ராணிமாவை கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பிரசாந்தை கைது செய்து அவரிடம் இருந்த 8 சவரன் நகை மற்றும் 3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.