தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கிங்டம் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாக்கியஸ்ரீ போர்ஸ், சத்தியதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் இணைந்து பணியாற்ற பல வருடங்களாக காத்திருந்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விஐபி மற்றும் 3 படங்களை பார்த்தபோது அனிருத் மீது எனக்கு அன்பு உருவானது. யார் இந்த மேதை? அவர் சாதாரணமான ஆள் கிடையாது என்பது போல் இருந்தது.

அப்போது நான் நடிகராகவில்லை. ஆனால் நான் எப்போதாவது ஒரு நடிகராக மாறினால் இவர்தான் என் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஒரு ராஜாவாக இருந்திருந்தால் அனிருத்தை கடத்தி வந்த அரண்மனையில் வைத்து என் படங்களுக்கு மட்டும் இசையமைக்க செய்திருப்பேன். அனிருத் உடன் இணைந்து பணியாற்ற பல வருடங்களாக காத்திருந்தேன் என்று தெரிவித்தார்.