இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என்று பேரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் இன்று அரங்கேற்றம் செய்கிறார். இதன் மூலம் அவர் இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைக்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா பதிவு ஒன்றை வெயிட்டுள்ளார். அதில் அன்புள்ள அப்பா நீங்கள் செய்யும் அனைத்தையும் பார்த்து நான் பெருமை அடைகிறேன். சிம்பொனி நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.