
சென்னை மாவட்டத்தில் உள்ள கதீட்ரல் சாலையில் 46 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட”கலைஞர் நூற்றாண்டு பூங்கா”அண்மையில் அக்டோபர் ஏழாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் தோட்டக்கலை அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு திடல், பொழுதுபோக்கு அரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. தோட்ட துறைக்கு சொந்தமான 6.9 ஏக்கர் நிலத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 100 மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது.
பூங்காவில் உள்ளே சில பொழுதுபோக்கு அமைப்புகளை பார்வையிடுவதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வங்க கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் பல்வேறு கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” கொடுத்துள்ளது. இதில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிக அதிக கனமழையும் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன மழை காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்டோபர் மாதம் 16, 17,18 ஆகிய தேதிகளில் மூடப்படுகிறது. இவ்வாறு தோட்டக்கலைத்துறை கூறியுள்ளது.