நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரைச் சேர்ந்த 55 வயதான பிரபல மருத்துவர் ஆர்னே பை, கடந்த 20 ஆண்டுகளாக தன்னிடம் சிகிச்சை பெற வந்த 70-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. கடந்த 2004 முதல் 2022 வரை மருத்துவ பணியில் இருந்த இவர், அந்த சம்பவங்களை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்திருந்தார்.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து அவரிடம் சிகிச்சை பெற்ற பல பெண்கள் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தனர். மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற சாட்சிகளின் அடிப்படையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின் போது, மருத்துவர் ஆர்னே, “எனக்கு ஞாபகம் இருக்கிற பாலியல் சம்பவங்கள் 20 மட்டுமே” என நீதிமன்றத்தில் கூறினார். இருப்பினும், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. தற்போது, அவர் மீது மருத்துவ பணியில் நிரந்தர தடை விதிக்கப்பட்டு, சிறைவாசம் செய்ய உள்ளார். மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.