
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழவனக்குடி பகுதியில் வசித்து வரும் 5 குடும்பத்தினர் சேதமடைந்த வீட்டில் வசித்து வருவதால் புதிய வீடு கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசு உடனே ஏற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
மேலும் இது தொடர்பாக உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி ஊராட்சியைச் சேர்ந்த அண்ணன் நாகராஜன் அவர்களும், சுய உதவிக்குழுவில் இயங்கி வரும் அவருடைய மனைவியும், சேதமடைந்த குடிசை வீட்டில் வசிப்பதாக இன்று காலை நம்மிடம் கூறினர். மேலும், #கலைஞர்_கனவு_இல்லம் திட்டத்தின் கீழ், புதிய வீட்டினை கட்டிக்கொள்ள உதவிட வேண்டும் என்றும் இன்று காலை நம்மிடம் கோரிக்கை விடுத்தார். இதனடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு, அண்ணன் நாகராஜனுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீட்டினை கட்டிக்கொள்வதற்கான ஆணையை மொச்சக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கே சென்று வழங்கினோம்.
கலைஞர் கனவு இல்லத்துக்கான ஆணையைப் பெற்ற அக்குடும்பத்தினர், விரைவில் வீடுகட்டி முடிக்கப்பட்டதும், அந்த புதிய வீட்டுக்கு நாம் வருகை தர வேண்டும் என்று அன்பை வெளிப்படுத்தினர். ஏழை – எளிய மக்களின் தலைக்கு மேலே கான்கிரீட் கூரைகள் அமைய வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுத்தப்பட்டுள்ள ‘கலைஞர் கனவு இல்லம் திட்டம்’, இன்னும் பலரது வாழ்க்கைக்கு நிழல் தரவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இதேபோன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய திருவாரூர் மண்ணில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் சகோதரிகளுடன் இன்று நேரில் சந்தித்து உரையாடினோம். அப்போது, பழவனக்குடி ஊராட்சியைச் சேர்ந்த சுய உதவிக்குழு சகோதரி சுகன்யா, தான் குடியிருக்க பட்டா இடமும், வீடு கட்டுவதற்கு உதவியும் செய்ய வேண்டும் என்று நம்மிடம் கோரிக்கை வைத்தார். அதே போல க.சசிகலா, கா.அமுதா, இ.சுசி, சித்ரா ராஜாகண்ணு உள்ளிட்டோர் அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி வீடு கட்டிக்கொள்ள பட்டா வழங்கிடுமாறு மனு அளித்தனர்.
அவர்களின் கோரிக்கையை உடனே பரிசீலித்து, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், சகோதரி சுகன்யாவுக்கு கலைஞர் கனவு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்கும், வீட்டுமனைக்கான பட்டாவை வழங்குவதற்கும் அவரது வீட்டுக்குச் சென்று ஆணைகளை வழங்கினோம். மேலும் அங்கே, பட்டா வேண்டி கோரிக்கை வைத்திருந்த சகோதரிகள் சசிகலா, அமுதா, சுசி, சித்ரா ராஜாகண்ணு உள்ளிட்டோருக்கும், வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகளை வழங்கி மகிழ்ந்தோம். விளிம்பு நிலை மக்களை கைதூக்கி விடுகிற நம் #திராவிட_மாடல் அரசின் திட்டங்கள், சுகன்யா உள்ளிட்டோர் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான மக்களின் கனவை நிறைவேற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய திருவாரூர் மண்ணில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் சகோதரிகளுடன் இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
அப்போது, பழவனக்குடி ஊராட்சியைச் சேர்ந்த சுய உதவிக்குழு சகோதரி சுகன்யா, தான் குடியிருக்க பட்டா இடமும், வீடு கட்டுவதற்கு உதவியும் செய்ய வேண்டும் என்று… pic.twitter.com/BlM7ueEVNx
— Udhay (@Udhaystalin) March 6, 2025