
கில்லி படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்தவர்தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பல படங்களிலும் வில்லனாக மிரட்டி வருகிறார். இதற்கிடையில் 57 வயதில் ரூபாலி என்பவரை கடந்த 2023 ஆம் வருடம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் இந்த வயதில் இரண்டாவது திருமணம் செய்து குறித்து சமூக வலைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டது. திருமணம் செய்யாமல் லிவிங் உறவில் இருக்கலாமே என்று கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் ஆஷிஷ் வித்யார்தி அளித்துள்ள பேட்டியில், “இந்த வயதில் ஏன் திருமணம்? லிவிங் உறவில் இருக்கலாமே என்று பலரும் சொன்னார்கள். அதனால் தான் திருமணத்தை இப்படி வெளிப்படையாக கொண்டாடினோம். யாரோ ஏதோ நினைப்பார்கள் என்று தான் பலரும் நினைத்த வாழ்க்கையை வாழாமல் விட்டு விடுகிறார்கள்” என்று கூறி உள்ளார்.