தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் சினிமா வில்லும் நடித்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவரை  பற்றி அடிக்கடி சர்ச்சைகளும் கிளம்பும்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகாவின்‌ 5 வருட சினிமா வாழ்க்கையில் ஹைதராபாத், மும்பை, கூர்க், கோவா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் 5 சொகுசு பங்களாக்கள் இருப்பதாக ஒரு மீம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு நடிகை ராஷ்மிகா இந்த தகவல் உண்மையாக இருந்தால் கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும் என்று கூலாக பதில் அளித்துள்ளார். மேலும் ராஷ்மிகாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.