குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஷேர்சாட் ஆப் மூலம் மகாராஷ்டிராவை சேர்ந்த முகமது சாதிக் என்ற வாலிபருடன் நெருங்கி பழகினார். கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முகமது சாதிக் சிறுமியை தனியாக பார்க்க வேண்டும் என கூறினார். இதனால் அவரை பார்ப்பதற்காக சிறுமி மும்பைக்கு சென்றார்.

இந்த நிலையில் சிறுமியை சந்தித்த முகமது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சுமார் ஐந்து மணி நேரத்தில் மூன்று முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் முகமது சாதிக்கை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முகமது சாதிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.