
மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அதிக அளவு செய்தது யார் என்பது தொடர்பாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில் திமுக மூன்றாண்டு காலத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 592 மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. 3.38 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.