ஐபிஎல் போட்டி தொடங்கிய 18 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. 18 வருடங்களுக்குப் பிறகு தங்களுடைய முதல் கோப்பையை ஆர்சிபி பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. விராட் கோலிக்காக பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் 18 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த மகளிர் ஐபிஎல் போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஆடவர் பிரிவிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெங்களூர் அணியின் உரிமையாளர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) தற்போது டியாஜியோ (Diageo) என்ற பிரிட்டிஷ் பன்னாட்டு மதுபான நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆக உள்ள யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. 2025-ம் ஆண்டு நிலவரப்படி, RCB உரிமையாளர் USL-ஆகும். அணியின் மேலாண்மை மற்றும் பிராண்ட் ஒத்துழைப்புகள் போன்றவை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) என்ற நிறுவனத்தின் கீழ் நடைபெறுகின்றன.

விஜய் மல்லையாவிலிருந்து டியாஜியோ வரை – உரிமை மாற்ற வரலாறு

2008: ஐபிஎல் தொடக்கத்தில் RCB அணியை $111.6 மில்லியனுக்கு விஜய் மல்லையா வாங்கினார்.

2013-2016: டியாஜியோ, USL இல் பங்குகளை வாங்கத் தொடங்கியது.

2016 ஆம் ஆண்டு நிதி சர்ச்சைகள் காரணமாக, விஜய் மல்லையா USL தலைமை பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், USL – டியாஜியோவின் கட்டுப்பாட்டில், RCB-யின் உரிமையை முழுமையாக கைப்பற்றியது.

கடந்த 2023: USL, RCB அணிக்கான செயல்பாடுகளை தனியாக நிர்வகிக்க, RCSPL என்ற துணை நிறுவனத்தை உருவாக்கியது. 2024-ம் ஆண்டில், RCB அணியின் பிராண்ட் மதிப்பு $117 மில்லியன் (சுமார் ₹1013 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 67% அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள், அதிகமான பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் பெண்கள் IPL (WPL), Esports போன்ற புதிய துறைகளில் விரிவாக்கம் ஆகியவையும் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும்.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) பற்றி:

1826-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முன்னணி மதுபான நிறுவனம்.

டியாஜியோவின் முழு உரிமை கொண்ட துணை நிறுவனம்.

McDowell’s No.1, Royal Challenge, Signature ஆகிய பிரபல மதுபானங்களை வழங்குகிறது.

ஐபிஎல் விளம்பர வரம்புகளுக்கு மத்தியில், RCB அணியை பிராண்டிங் வாகனமாக பயன்படுத்துகிறது.

மேலும் விஜய் மல்லையாவால் தொடங்கப்பட்ட RCB இன்று டியாஜியோவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிகமான ரசிகர்களும், வலுவான பிராண்ட் மதிப்பும் கொண்ட ஆர்சிபி அணியின் தற்போதைய உரிமையாளராக டியோஜியோ இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி பிரதமேஷ் மிஸ்ரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.