150 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறி வருவதாகவும் ஆனால் 150 இடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் குறிப்பிட்டார். INDIA கூட்டணி ஆட்சி அமைத்ததும் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும். ஜிஎஸ்டி மாற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.