தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராஜ் தருண். இவர் மீது லாவண்யா என்ற பெண் தற்போது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதாவது நடிகர் தருண்ராஜ் தன்னுடன் 10 வருடங்கள் லிவ் இன் உறவில் இருந்துவிட்டு தற்போது சக நடிகை ஒருவருடன் சேர்ந்து தன்னை ஏமாற்றுவதாக ‌ கூறியுள்ளார். அதாவது நடிகர் தருண் ராஜ் தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் இதை சட்டப்படி முறைப்படுத்துவேன் என்று கூறிவிட்டு தற்போது தன்னை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தருண்ராஜ் நாங்கள் 10 வருடங்கள் ஒன்றாக இருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு நாங்கள் இருவரும் பேசி சமரசமாக பிரிந்து கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறி பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைக்கிறார். எனக்கு இதைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை. ஒருமுறை லாவண்யா போதை பொருள் வழக்கில் சிக்கி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். நான் அதைப்பற்றி வெளியில் கூட சொல்லவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.