தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு மேல் அவரின் இறுதி ஊர்வலம் புறப்படும் என்பதால் அதுவரை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதலே அவருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிறகு ஊர்வலமாக கொண்டு சென்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளார்