இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்து சென்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் நிலையில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.

இதுவரை டெல்லி அணி, கொல்கத்தா அணி மற்றும் பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளை இறுதி போட்டிக்குள் அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனையை பெற்றுள்ளதால் ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ள நிலையில் கடந்த முறை கொல்கத்தா அணி கோப்பையை வெல்லவும் காரணமானார். இதனால் அவருக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஒருபுறம் நினைக்க மறுபுறம் 18 வருடங்களாக ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலிக்காக ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என மற்றொருபுறம் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இதனால் கோப்பை யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் ராஜமவுலி பலரின் ஆதங்கத்தையும் ஒரே பதிவின் மூலம் வெளிப்படுத்திவிட்டார். இது பற்றி ராஜமௌலி வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரேயஸ் ஐயர் டெல்லி அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற நிலையில் கொல்கத்தா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் இரு அணிகளுமே அவரை கைவிட்டு விட்டது.

தற்போது பஞ்சாப் அணியை 11 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த வருடமும் கோப்பையை வெல்ல அவருக்கு முழு தகுதி இருக்கிறது. மற்றொருபுறம் விராட் கோலி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆயிரக்கணக்கான ரன்களை குவித்துள்ளார். அவரும் இறுதி போட்டியில் இருக்கும் நிலையில் அவரும் கோப்பையை வெல்ல தகுதியானவர்தான்.

எனவே முடிவு என்னவாக இருந்தாலும் இறுதியில் மனவேதனை மட்டும்தான் மிஞ்சும் என கூறியுள்ளார். மேலும் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளில் இந்த அணி கோப்பையை வென்றாலும் கடைசியில் ரசிகர்களுக்கு மன வேதனை என்பது நிச்சயமாக இருக்கும் என ராஜமவுலி ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.