
கர்நாடகாவின் சித்தரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள காயத்ரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரபரப்பான சண்டை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அரசிகேரே அருகே திப்பகட்டா பகுதியைச் சேர்ந்த கார்த்திக் நாயக் என்பவர், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். முத்தேனஹல்லி பகுதியைச் சேர்ந்த தனுஜா என்பவர் இவருடைய முதல் மனைவி ஆவார்.
Chitradurga : 2ನೇ ಮದುವೆ ಆಗಲು ಹೊರಟ್ಟಿದ್ದ ಪತಿಗೆ ಪತ್ನಿಯಿಂದ ಧರ್ಮದೇಟು | 2nd Marriage Incident | Sanjevani News
.
.
.
.
.#Sanjevani #SanjevaniNews #2ndMarriageIncident #Tanuja #Karthik #TanujaHusband #2ndMarriage #SriGayathriKalyanaMantapa #Chitradurga pic.twitter.com/4CzadUTZRs— Sanjevani News (@sanjevaniNews) June 8, 2025
இந்நிலையில், கார்த்திக்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தபோது, தனுஜா தனது குடும்பத்தினருடன் கல்யாண மண்டபத்திற்கு வந்து அவரை நேரில் சந்தித்து கடுமையாக சண்டை போட்டார்.
மேலும் பொதுமக்கள் முன்னிலையில், தனது கணவரான கார்த்திக்கை செருப்பால் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். திருமணம் நடைபெற இருந்த இரண்டாவது பெண்ணின் குடும்பத்தினருக்கு கார்த்திக் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியாது.
இதுகுறித்து சித்தரதுர்கா நகர காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது திருமண முயற்சி மற்றும் வரதட்சணை பெறும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.