18 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டியின் நேரடியாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது.

இன்று சின்னசாமி மைதானத்தில் மாலை 6:00 மணி அளவில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் நிலையில் அதன் பிறகு பெங்களூர் நகரில் திறந்தவெளி பேருந்தில் வீரர்கள் பேரணி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அகமதாபாத் மைதானத்திலிருந்து சற்று நேரத்திற்கு முன்பாக பெங்களூருக்கு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வந்தடைந்த நிலையில் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்களை நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் வீரர்களை பேருந்தில் டி.கே சிவக்குமார் அழைத்துச் செல்லும் நிலையில் வழி முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். துணை முதல்வர் சிவகுமார் விராட் கோலிக்கு பூங்கொத்து மற்றும் ஆர்சிபி கொடியை கொடுத்து வரவேற்று அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது காரில் செல்லும்போது ஆர்சிபி கொடியை கையில் ஏந்தியவாறு செல்கிறார். மேலும் ஏற்கனவே போட்டி தொடங்குவதற்கு முன்பாக 18 வருட கனவை ஆர்சிபி நனவாக்க வேண்டும் என டிகே சிவகுமார் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது மிகப்பெரிய ரசிகராக அவர் காரில் கொடியை கையில் ஏந்தி கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.