விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவுவோரை ஊக்குவிக்கும் வகையில்  உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.  மத்திய அரசு ஏற்கனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது.

தற்போது இந்த பணத்தோடு சேர்த்து  மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக 5000 ரூபாய் வழங்கப்படும். விபத்தில் சிக்கும் ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றி இருந்தாலும் அனைவருக்கும் தலா 5000 வழங்கப்பட உள்ளது.