தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தளபதிக்கு பல்வேறு முக்கிய நடிகர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். எனினும் நான் தளபதி படத்தை பார்க்கவே மாட்டேன் என நடிகர் நெப்போலியன் கோபமாக முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்தார். போக்கிரி படத்தில் ஒன்றாக பணிபுரிந்த அவர்கள் இடையில் பிரச்சனை ஏற்பட்டது என கூறப்பட்டது. அதன்பின் விஜய்யுடன் இணைந்து நடிக்க தயாரென 15 ஆண்டுகளுக்கு பின் இன்னொரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் நெப்போலியன்.

இந்த நிலையில் நெப்போலியன் விஜய் மீது மிகவும் கோபத்தில் இருக்க என்ன காரணம் என்று இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதாவது, விஜய் கேரவனில் உடை மாற்றிக்கொண்டு அடுத்த காட்சிக்காக தயாராகி கொண்டிருந்த சமயத்தில் நெப்போலியன் அவரது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு தளபதியின் கேரவனுக்கு சென்றாராம். இதை எதிர்பார்க்காத தளபதி விஜய் உள்ளே இருந்து கோபமாக எதோ சில வார்த்தைகள் கூற, அது நெப்போலியன் காதில் விழுந்துள்ளது. இதனால் அவர் கோபத்தில் வெளியேறி விட்டாராம். அதன் காரணமாகதான் அவர் விஜய் மீது கோபத்தில் இருக்கிறார்.