
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, பல்கலைக்கழகங்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவது மாநில அரசு. ஆனால் வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கா? மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கும் வரை சட்டமன்ற அரசியல் போராட்டம் தொடரும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.