தமிழக முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, கனிமொழி எம்பி மற்றும் டிஆர் பாலு போன்றோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒழுங்கான முறையில் பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார். அதாவது கனிமொழி எம்பி மற்றும் டிஆர் பாலு போன்றோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி மௌனம் காத்ததாகவும், சேது சமுத்திர திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதன்பிறகு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறிய முதல்வர் ஸ்டாலின் 15 லட்சம் போடுவார் என்று பிரதமர் கூறினாரே. 15 ரூபாயாவது போட்டாரா என்று கேள்வி எழுப்பினார். ஒரு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக அவர் சொன்ன நிலையில் அது தொடர்பான கேள்விக்கு பதில் இல்லை. 77 பேர் சாப்பிடும் உணவை தராமல் 23 சதவீதம் பேர் தரும் உப்புமாவை பேசும் கதை தான் நாட்டில் நடக்கிறது என்று கூறியுள்ளார்.