உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் 600 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது.

இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 160 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று உக்ரைன் ரஷ்யா மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதில் 110 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.