அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு போதை பொருள் கடத்துவது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் திரிபுரா தெலியாமுராவில் என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்தது. இதனால் அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் யாபா என்ற போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இந்த 70 ஆயிரம் யாபா மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் போதை மாத்திரைகளை கடத்தி வந்த நபர்களை பிடித்து விசாரித்த போது அவர் திரிபுராவை சேர்ந்த ஷமல் மஜும்தார் மற்றும் மலாயா தேப்நாத் என்பது தெரியவந்தது‌.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போதை பொருள் கடத்திய  இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.