ஒரு டாக்சி ஓட்டுநர், மூச்சு திணறி மயங்கியிருந்த குரங்கிற்கு CPR (உயிர் மீட்பு சுவாசம்) செய்து அதனை மீட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வைரலான வீடியோவில், குரங்கு ஒன்று கீழே விழுந்து மூச்சு இழந்த நிலையில் காணப்படுகிறது. இதைப் பார்த்த டாக்சி ஓட்டுநர்  விரைவாக ஓடி வந்து குரங்கை தனது கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு, அதன் மார்பில் கை வைத்து CPR செய்ய ஆரம்பிக்கிறார். குரங்கு முதலில் எந்தவிதமான அசைவும் இன்றி இருந்தது.

இருந்தாலும் அந்த ஓட்டுநர் விடாமல் தொடர்ந்து CPR செய்து குரங்கை உயிருடன் மீட்க முயற்சி செய்தார். “எழுந்திரு சாமி” என்று குரங்கிற்கு விடாமல் சத்தமிட்டு கொண்டிருந்தார். இறுதியில் குரங்கு கண் விழித்தது. இதைப் பார்த்ததும், அந்த ஓட்டுநரின் மகிழ்ச்சி அளவிட முடியாதது. “ஆ.. எழுந்துட்டான்!” என்று மகிழ்ச்சி வெளிப்படுத்தி, அதனை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, காரை நோக்கி ஓடினார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது.