ஆந்திராவில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் இடையில் மாணவர் ஒருவர் ஆசிரியரை பயமுறுத்தும் வகையில் பதில் எழுதியுள்ளார்.

அதாவது தேர்வில் ராமாயணம் பற்றி எழுதுமாறு கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, உரிய பதில் எழுதாமல், எனது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர், எனக்கு அதிகமாக மார்க் போட வேண்டும், இல்லாவிட்டால் எனது தாத்தாவிடம் கூறி மாந்திரீக பூஜை செய்து உங்களுக்கு சூனியம் வைத்து விடுவேன் என்று மாணவன் எழுதியுள்ளான். இதனை பார்த்த ஆசிரியர் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகிகி வருகிறது.