திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள கே.என் கண்டிகை கிராமத்தில் சிவகுமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று மதியம் மது அருந்தி  கொண்டிருந்தார். அப்போது அவருடைய தம்பி தேவேந்திரன் (30) அங்கு வந்தார். அப்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தேவேந்திரன் தன் அண்ணனை பட்டாக்கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகுமார் அங்கிருந்து ஓடிய நிலையில் விடாமல் துரத்தி துரத்தி அவரை வெட்டி படுகொலை செய்தனர். அதன் பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தேவேந்திரனை கைது செய்த நிலையில் கூட்டாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேவேந்திரனின் மாமியாருடன் சிவகுமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது மாமியாருடன் தன் அண்ணன் தகாத உறவில் இருந்து வந்த நிலையில் இதை பலமுறை தேவேந்திரன் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கேட்காமல் தொடர்ந்து அவர் மாமியாருடன் தகாத உறவில் இருந்ததால் ஆத்திரத்தில் வெட்டி படுகொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.