உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிப்பூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மருமகனை கொலை செய்ததாக மாமனார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த மருமகன் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசலத் என்பவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சுபியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வருடத்திற்கு பிறகு அசலத் தனது மாமியார் கல்லன் பேக்கின் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு அவர் காணாமல் போனதால் கல்லன் பேக் தனது மருமகனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த புகாரியின் அடிப்படையில் போலீசார் கல்லனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது 15 ஆண்டுகள் கழித்து அசலத் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திரும்பி ஊருக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்தவுடன் போலீசார் அசலத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எப்படி காணாமல் போனார்? ஏன் இதுவரை ஊருக்கு வராமல் இருந்தார்? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.