தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இளங்கலை போஸ்ட் பேசிக், பிஎஸ்சி நர்சிங் படிப்பு மற்றும் துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி வரை பதிவு மற்றும் இடங்களை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே முதுகலை செவிலியர் மருந்தியல் பிசியோதெரபி படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.