
பிரான்சில் டாமினிக் பெலிக்கோட்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்து ஆண்டுகளாக தனது முன்னாள் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வந்துள்ளார். டாமினோக் குறைந்தது 80 ஆண்களையாவது வரவழைத்து தனது முதல் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். ஆன்லைன் மூலம் தான் சந்தித்த நபர்களை டாமினிக் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதன் பிறகு மனைவியை பலாத்காரம் செய்வதற்காக அவர்களை வரவழைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டாமினிக்கை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 50 நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.