
கேரள மாநிலம் செங்கலா பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உஸ்மான் 14 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து காசர்கோடு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உஸ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு காசர்கோடு விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி உஸ்மானுக்கு 167 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.