ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஃபைனல்ஸ் தேதியை நிர்ணயித்த பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, தனது மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

மும்பையை வீழ்த்தியவுடன், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி மிகுந்த உற்சாகத்தில் களத்தில் கொண்டாடியது. பிரீத்தி ஜிந்தா மற்றும் இணை உரிமையாளர் நெஸ் வாடியா இருவரும் தோழமையுடன் மைதானத்திற்குள் சென்றனர். பாலிவுட் நடிகையான பிரீத்தி, கைகளை உயர்த்தி குதித்து தரையில் இறங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

அதாவது பிரீத்தி ஜிந்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் ஆகியோருடன் கட்டி தழுவிக்கொண்டு சிறிது நேரம் உரையாடினார். அதே நேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரை நோக்கி பிரீத்தி கண் சிமிட்டிய விதமும் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பிபிகேஎஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தற்போது பஞ்சாப் கிங்ஸ், முதல்முறையாக ஐபிஎல் ஃபைனலில் டிராபி கனவை நினைவாக்க தயாராகிறது. மேலும் நாளை பெங்களூர் மற்றும் பஞ்சாப் இடையே போட்டி நடைபெறும் நிலையில் இரு அணிகளுமே இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.