
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரைக்காலை சேர்ந்த தினேஷ்(21) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த ராகவன்(20) என்பவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராகவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் உயிரிழந்த தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.